ரூ.10 லட்சம் பெற்று சென்னை பெண் மோசடி

போடி, ஆக 3: போடி அம்மாகுளத்தைச் சேர்ந்தவர் முகமது நைனார் மகன் சையது இப்ராஹிம் (44).இவர் சொந்தமாக வீடு கட்டிக் வருகிறார். இந்நிலையில் வீட்டில் உள் அலங்காரம் செய்ய திட்டமிட்டார்.பக்கத்து வீட்டில் உள்ள நண்பர் முரளி என்பவர், சென்னையைச் சேர்ந்த ஷீலா மோகன் என்பவரை அறிமுகப்படுத்தி உள் அலங்காரம் சிறப்பாக செய்து கொடுப்பார் என அறிமுகம் செய்து வைத்தார்.அதன்படி, கடந்த ஆண்டு டிச.1ம் தேதி சென்னையில் இருந்து போடிக்கு நேரில் வந்த ஷீலா மோகன், சையது இப்ராஹிமிடம் உள் அலங்கரா பணிக்கு ரூ.26 லட்சம் செலவாகும் என ெதரிவித்தார்.அப்போது, முன் தொகையாக ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டு, அடுத்தடுத்து 2,3 தவணைகளாக ரூ.5 லட்சம் வரை ஆன்லைன் மூலமாக சையது இப்ராஹிம் அனுப்பி வைத்தார்.ஆனால், ஷீலா மோகன் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து சையது இப்ராஹிம் புகாரில், போடி நகர் போலீசாா் விசாரிக்கின்றனர்.

The post ரூ.10 லட்சம் பெற்று சென்னை பெண் மோசடி appeared first on Dinakaran.

Related Stories: