நகர்மன்ற துணை தலைவர் மீது பாஜ நிர்வாகி தாக்குதல்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் 17வது வார்டு ஊரணிபட்டியில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று அப்பகுதியில் அதே வார்டு திமுக கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான செல்வமணி, மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப படிவம் பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது செல்வமணி, ஒலி பெருக்கி சத்தத்தை குறைக்க சொன்னார். இதுதொடர்பாக செல்வமணிக்கும், பாஜ ஓபிசி பிரிவு நகர பொதுச்செயலாளரும், ஊர் நாட்டாண்மையான சிவப்பிரகாசத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த செல்வமணி திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

The post நகர்மன்ற துணை தலைவர் மீது பாஜ நிர்வாகி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: