இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துவதற்காவும், ஊரகப்பகுதிகளில் விளையாட்டுப்போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும்.
தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (CSR Fund) கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ.75 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு” இன்று (02-08-2023) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் / தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் மு. சாய் குமார் இ.ஆ.ப. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி இஆப., ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்த ரூ.75 லட்சத்தை விளையாட்டுதுறை அமைச்சரிம் வழங்கினார் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா appeared first on Dinakaran.