திருத்தணி கோயிலில் ரூ.2.50 கோடியில் பிரசாத கடை ஏலம்

 

திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோயிலில், கடந்த, 2017 ஆண்டு வரை தனி நபர் ஒருவர் ஆண்டுதோறும் ஏலம் எடுத்து பிரசாதக்கடை நடத்திவந்தார். அதன்பிறகு 6 ஆண்டுகளாக கோயில் நிர்வாகம் நடத்தி வந்தது. நடப்பாண்டிற்கான பிரசாதக்கடை ஏலம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், சென்னையை சேர்ந்த தனிநபர் ஒருவர், ரூ.2 கோடி 50 லட்சத்திற்கு பிரசாதக்கடை ஏலம் எடுத்தார். கடந்த 6 ஆண்டு பிறகு தனிநபருக்கு பிரசாத கடை மாறியுள்ளது குறிப்பிடதக்கது. இதேபோல், திருத்தணி கோயில் தலைமுடி காணிக்கை சேகரிக்கும் ஏலத்தையும் சென்னை சேர்ந்த தனிநபர் ரூ.2.22 கோடி ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

The post திருத்தணி கோயிலில் ரூ.2.50 கோடியில் பிரசாத கடை ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: