அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள்; இங்கே இருப்பவர்கள் தொண்டர் படை, அங்கே இருப்பவர்கள் குண்டர் படை… டெண்டர் படைதான் அங்கே இருக்கிறது. விசுவாசம் என்றால் என்ன என்பது அவர்களின் கண்களுக்கு தெரியாது; ஏனெனில் அவர்கள் துரோகத்தை தவிர, வேறு எதையும் அறியாதவர்கள்; அச்சாணி முறிந்து போனவர்கள்; டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள்.அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்துபாடி, சிந்துபாத் வேலை பார்ப்பவர்கள்; அச்சாணியை பற்றி பேசுகிறார்கள். ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணி விசுவாசமிக்க தொண்டர்கள் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை இன்று துரோகத்தால், ஒருசிலர் அபகரித்திருக்கிறார்கள்; அதை மீட்டு தொண்டர்களின் கையில் கொடுப்பதற்காகத்தான் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்.ங்களுக்கு டெண்டர் ஆசையில்லை; சந்திலே சிந்து பாட ஆசையில்லை; ஊழல் செய்வதில் நம்பிக்கையில்லை. கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என்று ஜெ. தொண்டர்களுக்கு தெரியும்.,”என்றார்.
The post அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள்.. ஒரே மேடையில் – டிடிவி தினகரன் – ஓபிஎஸ்!! appeared first on Dinakaran.