வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல் கொல்லிமலையில் ஆக.3ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!!

நாமக்கல்: வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல் கொல்லிமலையில் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் கொல்லிமலையில் நாளையும் நாளை மறுதினமும் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் மதுக் கடைகளை மூட நாமக்கல் டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார். செம்மேடு, சோளக்காடு, செங்கரை, காரவள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.

The post வல்வில் ஓரி விழாவையொட்டி நாமக்கல் கொல்லிமலையில் ஆக.3ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்..!! appeared first on Dinakaran.

Related Stories: