குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்தியவர் கைது

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் கண்ணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). இவரது நண்பர் ஈசாக்(37). இவர்கள் மதுரவாயல் சீமாதம்மன் நகர் பகுதியில் உள்ள காலி மைதானம் ஒன்றில் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்தி உள்ளனர். அப்போது மதுபோதை தலைகேறிய நிலையில், ஈசாக் இன்னும் சரக்கு வாங்கித்தா எனக் கூறி அஜித்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போதை தலைக்கேறிய ஈசாக் தான் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்தை சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த அஜித் ரத்தம் சொட்டசொட்ட மதுரவாயல் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் ஈசாக்கை கைது செய்து விசாரித்தனர். அதில், சரித்திர பதிவேடு குற்றவாளியான ஈசாக் மீது கொலை முயற்சி உள்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ஒரு முறை இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரிடமிருந்து ஒரு கத்தியை பறிமுதல் செய்த போலீசார் ஈசாக்கை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடிபோதையில் நண்பரை கத்தியால் குத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: