மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரயில் போக்குவரத்து வரும் 15ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 23ம் தேதி மழை காரணமாக பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து, மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் பாதுகாப்பு கருதி 15ம் தேதி வரை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தீபாவளி பண்டிகையை கொண்டாட நீலகிரிக்கு மலை ரயிலில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்….

The post மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் 15ம் தேதி வரை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: