அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 1, மொயீன் அலி 29, மார்க்வுட் 9 ரன்னில் பெவிலியன் திரும்ப நேற்றைய ஆட்ட நேரமுடிவில் இங்கிலாந்து 80 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 389 ரன் எடுத்து 377 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய பவுலிங்கில் ஸ்டார்க் 4, டாட் மர்பி 3 விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2, ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 ரன்னில் இன்று 4வதுநாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே இந்த டெஸ்ட்டுடன் தனது 17 வருட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார். 37 வயதான அவர் 166 டெஸ்ட்டில் 600 விக்கெட் எடுத்துளளார். 121 ஒருநாள் போட்டிகளில் 178,56 டி.20 போட்டியில் 65 விக்கெட் எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ஸ்டுவர்ட் பிராட், “இது ஒரு அற்புதமான பயணம், நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம். நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது. இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன். உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்\” என்று அவர் கூறினார்.
The post சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பிராட் திடீர் ஓய்வு அறிவிப்பு appeared first on Dinakaran.