இந்நிலையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனுக்களை பெற நேற்று விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. பொருளாதார குற்றப்பிரிவின் தென்மண்டல எஸ்பி மேக்லினா ஐடன் மனுக்களை பெற்றார். முகாம் நடைபெற இருப்பதை அறிந்த நியோமேக்ஸ் நிறுவன ஏஜென்ட்கள் விருதுநகரில் நேற்று முன்தினம் தனியார் ஓட்டலில் கூட்டம் நடத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தால் பணம் கிடைக்காது என மிரட்டியதை தொடர்ந்து முதலீட்டாளர்கள் பெரிய அளவில் புகார் அளிக்க வரவில்லை. நேற்று நடைபெற்ற முகாமில் 20 பேர் மட்டும் புகார் அளித்தனர்.
The post நியோமேக்ஸ் நிறுவனம் மிரட்டலால் விருதுநகர் சிறப்பு முகாமில் 20 பேர் மட்டுமே புகார் மனு appeared first on Dinakaran.