பாமக தொண்டர்கள் விடுதலை அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: கைது செய்யப்பட்ட பாமக தொண்டர்களை விடுதலை செய்யவேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: நெய்வேலியில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து தடியடி உள்ளிட்ட அரச வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் பாமக எந்த வகையிலும் பொறுப்பல்ல. கைது செய்யப்பட்ட பாமகவினர் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். ஆனால், சிங்கூர் நந்திகிராமத்தில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடக்கும் என்பதை தமிழக அரசுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர்களின் உணர்வுகளை மதித்து என்.எல்.சி.க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்த வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

The post பாமக தொண்டர்கள் விடுதலை அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: