பூஞ்சேரி கெங்கையம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகம் நடந்தது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையொட்டி, கோலமேலழகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்து 108 பால் குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் இசிஆர் சாலை, பூஞ்சேரி கூட்ரோடு, ஓஎம்ஆர் சாலை வழியாக சென்று பவழக்காரன் சத்திரத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலை சென்றடைந்தது. பின்னர், கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான, ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post பூஞ்சேரி கெங்கையம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: