அம்மன் கோயிலில் மண்டல பூஜை

 

சாயல்குடி, ஜூலை 27: சாயல்குடி அருகே எஸ்.எம்.இலந்தைகுளம் ராஜராஜேஸ்வரிஅம்மன் கோயில் மண்டலபூஜை நேற்று நடந்தது. சாயல்குடி அருகே எஸ்.எம்.இலந்தைகுளம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் அம்மன், கல்யாண விநாயகர், வள்ளி, தெய்வானை உடனுரை முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 47 நாளுக்கு முன் நடந்தது. 48வது நாள் மண்டல பூஜை யாகசாலை பூஜைகள், குருக்கள் வேதமந்திரங்களுடன் நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

நேற்று மகா பூர்ணஹீதி உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது. யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டு. யாக சாலையிலிருந்து புனிதநீர் குடம் புறப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சாமி விக்கிரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.

The post அம்மன் கோயிலில் மண்டல பூஜை appeared first on Dinakaran.

Related Stories: