நெல்லை: திசையன்விளையில் இளைஞர் முத்தையாவை நண்பர்களே சேர்ந்து கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நண்பர்களின் தங்கையை முத்தையா கேலி செய்ததால் 3 பேர் சேர்ந்து அவரை கொன்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். முத்தையா கொலை வழக்கில் திசையன்விளையை சேர்ந்த சுரேஷ், மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.