3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

 

கிருஷ்ணகிரி, ஜூலை 25: தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், திட்டப் பராமரிப்பு கோட்டம், ஓசூரின் கீழ் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் புளோரோஸிஸ் பாதிப்பு குறைப்பு திட்டம் மூலமாக, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பேரூராட்சிகள், கெலமங்கலம் மற்றும் தளி ஒன்றியங்களில் தலா 22 ஊராட்சிகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, கெலமங்கலம் ஒன்றியம் ஜக்கேரி அருகில் ராயக்கோட்டை-அத்திப்பள்ளி மாநில சாலை எண்.85 சாலையில், 4 வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக, குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, நாளை (26ம் தேதி) முதல் வருகிற 28ம் தேதி வரை 3 நாட்களுக்கும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க இயலாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: