தொடர்ந்து புகாரை விசாரித்த தீர்ப்பாயம், நிறுவனங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகப்படியான மரங்களை நட வேண்டும். இடப்பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் நிறுவனங்களை ஒட்டி உள்ள தனியார் இடங்களையும் பசுமையாக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 1 சதவீதத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒதுக்க வேண்டும். ‘மணலி சுற்றுச்சூழல் நிவாரண நிதி’ என இதற்கு பெயரிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர், வனத்துறை செயலாளர் ஆகியோர் மூலம் இந்த நிதியை கையாண்டு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் தொழிற்சாலைகளுக்கான மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து, தொழிற்சாலை பகுதிகளில் உமிழ்வை கட்டுப்படுத்த அந்த விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
The post எண்ணூர்-மணலி பகுதியில் காற்று மாசுபாடு தடுக்க ஆண்டு வருமானத்தில் 1% நிதி ஒதுக்க வேண்டும்: தனியார் நிறுவனங்களுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.
