மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

 

மேட்டுப்பாளையம்,ஜூலை21: மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டின் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. வரும் 25 ஆம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

காமெடி நடிகரும்,குணச்சித்திர நடிகருமான யோகிபாபு நேற்றிரவு வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அம்மனை வழிபட்ட யோகிபாபுவிற்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்மனை வழிபட்ட பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு சென்ற நடிகர் யோகிபாபு அங்கு ரூ.5 ஆயிரம் மதிப்பிலான ஆன்மீக புத்தகங்களை விலைக்கு வாங்கி சென்றார். யோகிபாபு வருகை குறித்து அறிந்த 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் திரண்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் யோகி பாபு தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: