நாயை கல்லால் அடித்ததை கண்டித்தவருக்கு அடி,உதை: 2 வாலிபர்கள் கைது

பவானி: பவானி மேட்டூர் மெயின் ரோடு காமராஜர் நகர் கவுண்டர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சக்திவேல் மகன் தனசேகர்(32). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது இவரது நாய் அவ்வழியே சென்ற பவானி காமராஜர் நகரை சேர்ந்த லாரி டிரைவர்களான யுவராஜ் மகன் மனோஜ் (19), அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் ஹரிஹரன் (26) ஆகியோரை பார்த்து குறைத்துள்ளது. இதனால், இருவரும் நாயை கல்லால் அடித்து தாக்கினர். இதைக்கண்ட தனசேகர் இருவரையும் கண்டித்துள்ளார்.அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதில் இருவரும் சேர்ந்து தனசேகரை கட்டையால் அடித்து காயப்படுத்தினர். இதுகுறித்து தனசேகர் அளித்த புகாரின்பேரில் மனோஜ், ஹரிஹரன் ஆகியோரை பவானி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post நாயை கல்லால் அடித்ததை கண்டித்தவருக்கு அடி,உதை: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: