பாஜக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறோம் என ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். கூட்டணியை பாஜக முறித்து கொள்ளும் வரை அந்த கூட்டணியில் தொடர்வோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனீ எம்.பி ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயம் உச்ச நீதிமன்றத்தை நடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய என நல்ல பெயரை வைத்திருக்கிறார்கள், அதை வரவேற்கிறோம் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்துக்கு அளிக்கப்படாத நிலையிலும் கூட்டணியில் தொடர்கிறோம் என தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவம் போல் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்வது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமை என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
The post பாஜகவே முறிந்து செல்லும் வரை அந்த கூட்டணியில்தான் இருப்போம்: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.