முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியனுக்கு அரிவாள் வெட்டு: நான்கு பேருக்கு போலீஸ் வலை

பொன்னேரி: பொன்னேரியில் முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியனுக்கு அரிவால் வெட்டு விழுந்தது. இதில், தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொன்னேரி வேன்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அப்பன் ராஜ்(28). எலக்ட்ரீஷியன். இவர், மின்சாதனங்களை பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை நேர்ந்த பாலாஜி என்பவருக்கும் இடையே நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை அப்பன்ராஜ் வீட்டில் இருந்துள்ளார்.

இதனை நோட்ட மிட்டு காத்துக் கொண்டிருந்தவர்கள், அத்துமீறி வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பாலாஜி, கார்த்திக், லோகேஷ், பெரியகாவனத்தைச் சேர்ந்த ஜெய் ஆகிய நான்கு பேரும் அப்பன் ராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். அப்பன்ராஜ் தலை, கைகளில் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசில் அப்பன்ராஜின் மனைவி நதியா நேற்று காலை புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீசார் வழக்குப்புதிவு செய்தனர். விசாரணையில், கொடுக்கல் வாங்களில் ஏற்பட்ட முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தலைமறைவான பாலாஜி உள்பட 4 பேரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இருப்பினும், பாலாஜியை கைது செய்து தீவிர விசாரணை நடத்திய பின்னர்தான், முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

The post முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியனுக்கு அரிவாள் வெட்டு: நான்கு பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: