நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து விவாதம்: சோனியாகாந்தி தலைமையில் வரும் 15ம் தேதி வியூகக் குழு கூட்டம்

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக சோனியாகாந்தி தலைமையில் வரும் 15ம் தேதி டெல்லியில் வியூகக் குழு கூட்டம் கூடுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது.

சட்டம் ஒழுங்கு விவகாரம், விலைவாசி உயர்வு, பொது சிபில் சட்டம் , டெல்லி நிர்வாக சிறப்பு மசோதா உள்ளிட்ட பிரச்சனைகளை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அமளி ஒத்திவைப்பு போன்றவற்றை தவிர்ப்பதற்காக மழைக்கால குட தொடருக்கு முன்னதாக அணைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரசின் நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக வெறும் 15ம் தேதி கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் வியூகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் மசோதாக்கள் மீதான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்தும் வியூகங்கள் வகுக்கப்படலாம் என தெரிகிறது.

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து விவாதம்: சோனியாகாந்தி தலைமையில் வரும் 15ம் தேதி வியூகக் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: