பீகார் பேரவையில் நாற்காலியை உடைத்து பாஜ எம்எல்ஏ ரகளை

பாட்னா: தேஜஸ்வி பதவி விலக கோரி பீகார் பேரவையில் பாஜ எம்எல்ஏ நாற்காலியை உடைத்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே வேலையில் சேர நிலம் லஞ்சமாக பெற்றதாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி மீது சிபிஐ குற்ற பத்திரிகை தாக்கல் செய்துள்ளதால் அவர் ராஜினமா செய்ய வேண்டும் என பாஜ எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் பாஜ எம்எல்ஏ ஒருவர் நாற்காலியை அடித்து உடைத்து, கையில் இருந்த பேப்பர்களை வீசி எறிந்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜ எம்எல்ஏவின் இந்த செயலுக்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தேஜஸ்வி கூறுகையில்,‘‘ இதே வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளில் இதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கடவுளுக்கு தான் தெரியும். 2வது முறையாக துணை முதல்வராக நான் பதவியேற்கும் போது இந்த பிரச்னையை ஏன் பாஜ எழுப்பவில்லை என்று பதிலடி கொடுத்தார்.

The post பீகார் பேரவையில் நாற்காலியை உடைத்து பாஜ எம்எல்ஏ ரகளை appeared first on Dinakaran.

Related Stories: