இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அங்கு தேவிபிரியா, அருண் பிரகாஷ்லால் ஆகியோர் தூக்கிலும், மோனிகாஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி தரையிலும் இறந்து கிடந்தனர். அருண் பிரகாஷ்லால் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டனரா? கடன் தொல்லையா அல்லது குடும்ப பிரச்னையா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோனிகாஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்ததால், அவருக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு, பின்னர் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தம்பதியின் செல்போன்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தகவலறிந்து, பெங்களூருவில் இருந்து ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த மூத்த மகள் பிரியா, பெற்றோர் மற்றும் தங்கையின் உடல்களை பார்த்து கதறி அழுதார். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ராசிபுரத்தில் பரபரப்பு கணவர், மகளுடன் கவுன்சிலர் தற்கொலை appeared first on Dinakaran.