கிரேட்டர் நொய்டா வாலிபருடன் காதல் இந்துவாக மாறினார் பாக். பெண் பிள்ளைகளின் பெயரும் மாற்றம்

கிரேட்டர் நொய்டா: கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது வாலிபருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற 30 வயது பெண்ணுக்கும் பப்ஜி விளையாடிய போது காதல் மலர்ந்தது. சீமாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் குலாம் ஹைதர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். ந்நிலையில், சச்சின் மீது ஏற்பட்ட காதல் காரணமாக கிரேட்டர் நொய்டாவுக்கு தனது 4 பிள்ளைகளுடன் வந்த சீமா, சச்சினுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவர் பாகிஸ்தானில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் நுழைந்ததால் போலீசார் கைது செய்தனர். சச்சினும் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இவர்களின் காதலை சச்சினின் பெற்றோர் ஏற்றுள்ளனர். இதனால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தனது வீட்டில் தங்க அனுமதி உள்ளனர்.இந்நிலையில், முஸ்லிம் பெண்ணான சீமா, சச்சினுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார்.

சீமா என்பது இந்து, முஸ்லிம்களுக்கு பொதுப் பெயர் என்பதால், அதே பெயரை வைத்துக் கொண்டுள்ளார். ஆனால், பின்னால் சேர்க்கப்பட்டு இருந்த தனது கணவர் ஹைதரின் பெயரை நீக்கி விட்டார். இப்போது, அவரின் பெயர் சீமா சச்சின் என்று மாற்றப்பட்டு உள்ளது. மேலும், தனது 4 பிள்ளைகளின் பெயர்களையும், ராஜ், பிரியங்கா, பாரி மற்றும் முன்னி என்று இந்து பெயர்களாக சீமா மாற்றி விட்டார். சீமாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கும்படி பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகிக்கு சச்சின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கங்கையில் புனித நீராடிய பிறகு, இந்து முறைப்படி சச்சின், சீமாவுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று சச்சினின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

The post கிரேட்டர் நொய்டா வாலிபருடன் காதல் இந்துவாக மாறினார் பாக். பெண் பிள்ளைகளின் பெயரும் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: