இறந்த ராஜபாண்டிக்கு வாஞ்சிநாதன், சங்கர பாண்டியன், சிவமுருகன் என 3 மகன்கள். இதில் 7 வயதான சங்கர பாண்டியன் தந்தையின் உடலை கொண்டுவர வீடியோ மூலம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அந்தச் சிறுவன், ‘‘முதலமைச்சர் ஐயா… எங்க அப்பாவை பாக்கணும் போல இருக்கு… எங்க அப்பா இங்க வரணும். எங்கள படிக்க வைக்கணும்னு வெளிநாட்டுக்கு போனாரு, இறந்துட்டாருன்னு போன்ல சொல்றாங்க. என் தந்தையின் உடலை ஊருக்கு கொண்டுவர உதவிட வேண்டும்’’ என கண்ணீர் மல்க, அழுகுரலுடன் வேண்டுகோள் விடுத்தார். சிறுவனின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post வெளிநாட்டுக்கு போனவரு இறந்துட்டாரு அப்பா உடலை கொண்டுவர முதலமைச்சரய்யா உதவணும்: சிறுவனின் கண்ணீர் வீடியோ வைரல் appeared first on Dinakaran.