ஆர்.கே.பேட்டை அருகே புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பள்ளிப்பட்டு: மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் உத்தரவின் பேரில், ஆர்.கே.பேட்டை அருகே அய்யனேரியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் புகையிலை ஒழிப்பு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி கிராம வீதிகளில் ஊர்வலமாக சென்று, பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் உடல்நலம் பாதிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கோவிந்தராஜன், சுகாதார ஆய்வாளர்கள் பாலன், பாலச்சந்தர், சலீம்பாஷா, பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை ஆசிரியர் ஜான் வில்சன் தேவாரம் மற்றும் ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: