மதுரை: மதுரையில் சட்டவிரோதமாக வீடுகளில் வளர்க்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை ஜூலை 17ம் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.