தொழிலாளியை தாக்கி மிரட்டிய 2 பேர் கைது

ஓசூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் இந்தசுதின் (28), கூலித்தொழிலாளியான இவர், தற்போது ஓசூர் அடுத்த கோவிந்த அக்ரஹாரம் சர்க்கிள் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனில்நாயக் (23), ராஜேஷ் நாயக் (24) ஆகியோர் தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 2ம்தேதி இரவு 10 மணியளவில், இந்தசுதின் வீட்டின் முன் குடிபோதையில் வந்த அனில் நாயக், ராஜேஷ் நாயக் ஆகிய இருவரும் சத்தமாக பேசியுள்ளனர். இதுகுறித்து தட்டிக்கேட்ட இந்தசுதினை, இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த இந்தசுதின், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி அனில் நாயக், ராஜேஷ் நாயக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

The post தொழிலாளியை தாக்கி மிரட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: