பெண்ணிடம் ஆபாச சைகை பாஜ பிரமுகர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (50). இவர், தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். மேலும் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தெர்மல் நகர் ரவுண்டானா பகுதியில் பெண்ணிடம் ஆபாச சைகை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் சத்தம் போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் பேரில் தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி மாரியப்பனை கைது செய்தனர்.

The post பெண்ணிடம் ஆபாச சைகை பாஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: