வழக்கம் போல் கட்டுமரங்கள் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்று காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. 3 கட்டுமரங்களில் கொஞ்சம் சூரை, அயரை, வேளா மீன்கள் கிடைத்தது. குறைவாக கிடைத்ததால் இவை வழக்கத்தைவிடவும் கூடுதல் விலைக்கு போனது. குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்றும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று 3 வது நாளாக குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
The post குளச்சல் கடலில் பலத்த காற்றுடன் மழை: 3வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு appeared first on Dinakaran.