டெல்லி : டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன். காவிரியில் தமிழ்நாட்டுக்கான தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு அறிவுறுத்த அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்தார். மேலும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
The post டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் உடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு appeared first on Dinakaran.