இந்நிலையில் நெல்லையில் இன்று இரவு நடக்கும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் தற்போது சேப்பாக் அணியும், மதுரை அணியும் 6 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளன. இன்றைய போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளோடு, அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு எளிதில் சென்றுவிடும். ஒருவேளை மதுரை தோற்றால், சேப்பாக், மதுரை, திருப்பூர் ஆகிய 3 அணிகளும் 6 புள்ளிகளுடன் சமநிலையை எட்டும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் ஏதாவது ஒரு அணி தேர்வு பெறும். எனவே நெல்லையில் நடக்கும் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
The post பிளே ஆப் சுற்றை எட்டும் 4வது அணி எது? டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று பரபரப்பான போட்டி appeared first on Dinakaran.