அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை

 

பரமக்குடி, ஜூலை 4: பரமக்குடி அருகே வாலேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை விழா நடைபெற்றது. பரமக்குடி அருகே பெரிய அக்கிரமேசி கிராமத்தில் பிரசித்தி வாலேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நேற்று பவுர்ணமி பூஜை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு வாலேஸ்வரி அம்மனுக்கு பால்,பன்னீர், தயிர்,இளநீர், மஞ்சள், திரவிய பொடி உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் பாண்டி குருக்கள் தலைமையில் நடைபெற்றது, மா,பலா, வாழை ஆகிய முக்கனிகள் அம்பாளுக்கு படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர், சோனையா, கருப்பணசாமி, இருளாயி அம்மன், ராக்கச்சி அம்மன், வீரமாகாளி ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post அம்மன் ஆலயத்தில் பவுர்ணமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: