இந்நிலையில் இன்று காலை நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலை நசுங்கிய நிலையில் ரஞ்சித்குமார் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், உடனடியாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரஞ்சித்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த ரஞ்சித்குமார் சடலம் அருகில் பெரிய கல் கிடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, நண்பர்களான ரஞ்சித்குமாரும், அதே பகுதியை கோவிந்தராஜ்(57) என்பரும் நேற்று காலை முதல்குடிபோதையில் எண்ணூர் பகுதியில் சுற்றிவந்துள்ளனர். போதையில் அவர்களுக்கு வீண் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இன்று காலையும் இருவரும் மதுஅருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ரஞ்சித்குமார் தலையில் பெரிய கல்லை எடுத்து வந்து போட்டு கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எண்ணூரில் இன்று காலை பயங்கரம்; குடிபோதை தகராறில் தலையில் கல்லை போட்டு மீனவர் படுகொலை: நண்பர் கைது appeared first on Dinakaran.