செங்குன்றம் பேரூராட்சியில் தூய்மை ஆய்வாளருக்கு பிரிவுபசார விழா

புழல்: செங்குன்றம்-நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் நீண்ட காலமாக சுகாதார துறையின் தூய்மை பணி ஆய்வாளராக பணியாற்றியவர் மதியழகன் (58). இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கான பிரிவுபசார விழா நேற்று மாலை பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடந்தது. பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் விப்ரநாராயணன், செயல் அலுவலர்கள் செங்குன்றம் பாஸ்கரன், மீஞ்சூர் வெற்றியரசு, கும்மிடிப்பூண்டி யமுனா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இதில் செங்குன்றம்-நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் சிறப்பாக பணியாற்றி மதியழகனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அவருக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கவுன்சிலர்கள் இலக்கியன் ரமேஷ், கார்த்திக், கோட்டீஸ்வரன், கோமதி பாஸ்கரன், ஸ்ரீதேவி தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செங்குன்றம் பேரூராட்சியில் தூய்மை ஆய்வாளருக்கு பிரிவுபசார விழா appeared first on Dinakaran.

Related Stories: