சிறப்பு விசாரணை குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர் தென் கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய பொது மேலாளராக அணில் குமார் மிஸ்ராவை நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முன்னதாக தென்கிழக்கு ரயில்வேயின் ரயில்வே கோட்ட மேலாளர் உள்பட 5 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post தென் கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் பதவியில் இருந்து நீக்கம் : ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு நடவடிக்கை!! appeared first on Dinakaran.
