பின்னர், கோயில் பூசாரி பெருமாள் கையில் அரிவாளுடன் அருள் வந்து சாமியாடியபடி, எருமை கிடா, பன்றிக்குட்டி மற்றும் சேவல் ஆகியவற்றை பக்தர்கள் முன்னிலையில் வெட்டி பலியிட்டார். பின்னர் அவற்றின் உடல்களை புதைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். எருமை கிடா, பன்றி கிடா மற்றும் சேவலை வெட்டியவுடன் அந்த குழியில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, உப்பை கொட்டினர். இதனையடுத்து அம்மன் ஊர்வலமாக பூஞ்சோலைக்கு சென்றடைந்தார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஆத்தூர், நந்தனார் தெரு மற்றும் சுற்றுப்பகுதிகள் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்ததனர்.
The post காளியம்மன் கோயில் திருவிழாவில் எருமை கிடா பலியிட்டு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.