பைக் மீது லாரி மோதியதில் எலக்ட்ரீசியன் பலி

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் உள்ள அன்பழகன் வீதியை சேர்ந்தவர் திலீப் குமார் (33). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து அண்ணா நகர் நோக்கி பவானிசாகர் சாலையில் வழியாக சென்று கொண்டிருந்தார். தாசம்பாளையம் அருகே சென்றபோது பவானி சாகரில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்ற லாரி பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் திலீப்குமார் பலத்த காயமடைந்தார். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் காயமடைந்த திலிப் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் திலீப் குமாரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது தெரிய வந்தது. இவ்விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதியதில் எலக்ட்ரீசியன் பலி appeared first on Dinakaran.

Related Stories: