இதனிடையே வேக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிர்கோஜின் உடன் ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் காரணமாக வேக்னர் படை பின்வாங்கி உள்ளது. வேக்னர் படையின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து ரஷ்ய நாட்டு மக்களிடம் ரஷ்ய அதிபர் புதின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வேக்னர் படையை வீழ்த்த உறுதுணையாக இருந்த ரஷ்ய மக்களுக்கு நன்றி. ரஷ்ய ராணுவ வீரர்கள் ஒருவரை ஒருவர் கொல்ல வேண்டும் என மேற்கு நாடுகள் விரும்புவதாக குற்றம்சாட்டினார். ரஷ்யாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவாகினால், அது தோல்வியில் தான் முடியும்.
வேக்னர் படை ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டிற்கு செல்லலாம். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியை உருவாக்க வேக்னர் படை முயன்றது. ரஷ்யாவில் ரத்தம் சிந்துவதை தவிர்க்க இறங்கிய வேக்னர் கூலிப்படை போராளிகள் மற்றும் தளபதிகளுக்கு நன்றி. வேக்னர் போராளிகள் விரும்பினால் பெலாரஸுக்கு இடம்பெயர அனுமதிப்பதாகவோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவோ அல்லது அவர்களது குடும்பங்களுக்குத் திரும்பவோ அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
The post ரஷ்யாவில் உள்நாட்டு கிளர்ச்சி உருவாகினால், அது தோல்வியில் தான் முடியும்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை appeared first on Dinakaran.