அதன்படி திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா இன்று காலை விமரிசையாக நடந்தது. அதையொட்டி, நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில், நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், பூஜைகளும், 16 வகையான தீபங்களால் தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர், காலை 10 மணியளவில் அலங்கார ரூபத்தில் சுவாமியும், அம்மனும் 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், திருமஞ்சன கோபுரத்தை அடுத்த கட்டை கோபுரம் வழியாக கோயிலுக்குள் சென்று மகிழமரம் முன்பு சுவாமியும், அம்மனும் எதிரெதிர் நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்திப்பெருக்குடன் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, சுவாமி மாட வீதியுலா நடைபெற்றது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்: சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பவனி appeared first on Dinakaran.