ஸ்பெயினின் பார்சிலோனாவில் சுட்டெரிக்கும் வெயில்; நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!!

ஸ்பெயின்: ஸ்பெயினில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் நீர்நிலைகளை நாட தொடங்கியுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் 1961ம் ஆண்டிற்கு பிறகு கடுமையாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் பார்சிலோனிடா கடற்கரைக்கு படையெடுக்கும் மக்கள் கடலில் குளித்து வெப்பத்தை தணித்து கொள்கின்றனர்.

அங்கு கால்பந்து, அலைச்சருக்கு உள்ளிட்ட விளையாட்டுகளில் சிலர் பொழுதை கழித்து மகிழ்கின்றனர். இதனிடையே வரும் நாட்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் எனவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post ஸ்பெயினின் பார்சிலோனாவில் சுட்டெரிக்கும் வெயில்; நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: