இந்த நிலையில் போராட்டம் இன்று சாலைகளில் தொடராது, நீதிமன்றத்தில் தொடரும் என வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் “இந்த வழக்கில் எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் ஆனால் அந்த போராட்டம் நீதிமன்றத்தில் இருக்கும். சாலையில் அல்ல. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் சட்டரீதியான போராட்டம் தொடரும்,”எனத் தெரிவித்துள்ளனர். மேலும் சிறிது காலத்திற்கு சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாகவும் மூவரும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலுக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
The post நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும், ஆனால் அது சாலையில் அல்ல, நீதிமன்றத்தில் இருக்கும் : மல்யுத்த வீராங்கனைகள்!! appeared first on Dinakaran.