மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

ஆத்தூர்: ஆத்தூர் பழைய பஸ் நிலையம் முன், சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பிட கையெழுத்து இயக்கம், மாவட்ட செயலாளர் கோபால்ராசு தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஓசுமணி, கம்யூனிஸ்ட் கட்சி முருகேசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி மகேந்திரன், விசிக நாராயணன், செல்வம், மதிமுக நிர்வாகிகள் துரை, ரவிச்சந்திரன், சேதுபதி, செல்வகுமார், அசோகன், ராஜேந்திரன், பாலு, நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: