ஜெமினி சர்க்கஸ் துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஜெமினி சர்க்கஸ் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் கலாநிதி தலைமை வகித்தார். துணைத்தலைவர் பூபதி குத்துவிளக்கேற்றி வைத்தார். சர்க்கஸ் மேலாளர் வர்கீஸ் வரவேற்றார். 33வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணலட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் நம்பர் 1 சர்க்கஸ் மற்றும் ஆசியாவிலேயே புகழ்பெற்ற ஜெமினி சர்க்கஸ், 25 நாட்கள் நடைபெற உள்ளது.தினசரி மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடைபெறுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசங்கள் இடம்பெறுகிறது. ஆப்பிரிக்கா, எத்தோப்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் இதில் பங்கு பெற்றுள்ளனர்.

The post ஜெமினி சர்க்கஸ் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: