சேலத்து மாரியம்மன்

கோயில் கும்பாபிஷேகம்தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டையில், சேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில், சேலத்து மாரியம்மன் மற்றும் எல்லமன் தேவி கோயில் புனரமைக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரத்திற்கு, கும்பாபிசேக விழா 3 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கணபதி பூஜை, பெண்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 2ம்நாள் மூலவர் மற்றும் உற்சவர் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். நேற்று காலை, எல்லம்மா தேவி மற்றும் சேலத்து மாரியம்மன் கோயில் கும்பாபிசேக விழா நடைபெற்றது. ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

The post சேலத்து மாரியம்மன் appeared first on Dinakaran.

Related Stories: