பிஏபி கால்வாய் சீரமைப்பு பணி ஆய்வு

 

உடுமலை, ஜூன் 26: திருமூர்த்தி அணையில் இருந்து செல்லும் பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பக்கவாட்டு சுவர் மற்றும் தரைதளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது. பங்களாமேடு பகுதியில் கீழ்பகுதியில் தளி வாய்க்காலும், மேல் பகுதியில் பிஏபி கால்வாயும் செல்கின்றன. இரும்பு கம்பிகள் அமைத்து கான்கிரீட் அமைக்கப்படுகிறது.இந்த பணிகளை நேற்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காஞ்சிதுரை, உதவி செயற்பொறியாளர் சசிக்குமார், உதவி பொறியாளர் சண்முகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

The post பிஏபி கால்வாய் சீரமைப்பு பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: