திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 67,294 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 33,529 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.09 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. பக்தர்கள் சுமார் 2 கிமீ தூரமுள்ள டிபிசி காம்ப்ளக்ஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டி உள்ளது. அதேநேரத்தில் ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 2 கி.மீ. தூரம் காத்திருக்கும் பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: