ரத்த வெள்ளத்தில் அசோகன் துடிதுடித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் சாத்தாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து அசோகனை மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். காரில் வந்தவர்கள் எதற்காக அசோகனை வெட்டினார்கள், முன் விரோதம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சாத்தாங்காடு பகுதியில் தபால்நிலைய அலுவலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.