அதன்படி, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் தலைமையில், 114வது வட்டம் பெரிய தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து, சேப்பாக்கம் தலைவர் தணிகாசலம் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுப்பேட்டை பன்னீர் செல்வம், பாலா ஏற்பாட்டில் காங்கிரஸ் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோன்று, திருவல்லிக்கேணி மேற்கு தலைவர் எம்.ஜாஹீருதீன் முன்னிலையில் முத்தையா தெருவில் காங்கிரஸ் கொடி ஏற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர், சூளைமேடு சண்முகனார் சாலை கில்நகர் பார்க்கில் ஆயிரம் விளக்கு தலைவர் கராத்தே ஆர்.செல்வம், கவுன்சிலர் சுகன்யா செல்வம் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி, குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆயிரம் விளக்கு ஏ.ஜி.மணி முன்னிலையில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மதியம் பிரியாணி வழங்கப்பட்டது.
துறைமுகம் பகுதியில் நிர்வாகிகள் கருப்பையா, செல்லப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் காளிகாம்பாள் கோவில் சிறப்பு பூஜை, கந்தகோட்டம் முருகன் கோவில் தங்க தேர் பவனி நடத்தப்பட்டது. இதேபோன்று மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
The post ராகுல்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங். சார்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன் வழங்கினார் appeared first on Dinakaran.