காளையார்கோவில் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் பயிற்சி

காளையார் கோவில், ஜூன் 19: காளையார்கோவில் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. காளையார்கோவில் ஒன்றியத்தில் காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கொல்லங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கு ஆகிய குறுவள மையங்களில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர் பணித்திறன் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியை வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஜேம்ஸ், ஆலீஸ்மேரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் ஆகியோர் பார்வையிட்டார்கள். நல்வாழ்வு குறித்து மருத்துவர் தென்றல் ஆலோசனைகள் வழங்கினார். பயிற்சியில் மாணவர்களுக்கு உடல் நலம், மனநலம், மன்ற செயல்பாடுகள் மற்றும் கலையரங்கம் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வு, கண் பார்வை குறைபாடு, முன் கழுத்துக்கழலை நோய், காசநோய், ஆட்டிசம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும், வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், தன்சுத்தம், சுகாதாரம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் ஏதுவாளர்களாக ஆரோக்கியசாமி, பாண்டி, இராமநாதன், டேவிட், சகாயமேரி, கலைவாணி, ராஜசேகரன், பிரான்சிஸ் அருள்செல்வம், ஜெயமுருகன், ஜோசப் செங்கோல், செல்வகுமார், ராஜா, முருகானந்தம், செல்லக்குமார், லதா, லெட்சுமி, கதாம்பரி, பாண்டியன் ஆகியோர் செயல்பட்டனர்.

The post காளையார்கோவில் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு பணித்திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: